காவல்துறை கட்டுப்பாட்டில் பழனி முருகன் சிலை!
பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு காரணமாக பழனி முருகன் கோயிலின் உற்சவர் சிலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

பழனி: பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு காரணமாக பழனி முருகன் கோயிலின் உற்சவர் சிலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதால், கும்பகோணம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பழனி முருகன் பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு இப்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது,. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு இதில் சாட்டையை சுழற்றி இருக்கிறது. பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது. இந்த சிலையில் சேதம் ஏற்பட கூடாது என்று புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது.

இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி ஐம்பொன் சிலையை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. சிலை செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேடு நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இதை வெளிக்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக பழனி முருகன் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க கும்பகோணம் நீதிமன்றம் கூறியது. பழனி போலீசுக்கு இதற்காக ஆணையிட்டது.
இந்த நிலையில் இன்று காலை சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினரிடம் பழனி முருகன் சிலை ஒப்படைக்கப்பட்டுள்ளது. முருகன் கோயிலின் உற்சவர் சிலையை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் இந்த சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். 2 போலீஸ்கார்கள் பாதுகாப்புடன் முருகன் சிலை கும்பகோணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications