காவல்துறை கட்டுப்பாட்டில் பழனி முருகன் சிலை!
பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு காரணமாக பழனி முருகன் கோயிலின் உற்சவர் சிலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

பழனி: பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு காரணமாக பழனி முருகன் கோயிலின் உற்சவர் சிலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதால், கும்பகோணம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பழனி முருகன் பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு இப்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது,. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு இதில் சாட்டையை சுழற்றி இருக்கிறது. பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது. இந்த சிலையில் சேதம் ஏற்பட கூடாது என்று புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது.

இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி ஐம்பொன் சிலையை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. சிலை செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேடு நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இதை வெளிக்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக பழனி முருகன் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க கும்பகோணம் நீதிமன்றம் கூறியது. பழனி போலீசுக்கு இதற்காக ஆணையிட்டது.
இந்த நிலையில் இன்று காலை சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினரிடம் பழனி முருகன் சிலை ஒப்படைக்கப்பட்டுள்ளது. முருகன் கோயிலின் உற்சவர் சிலையை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் இந்த சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். 2 போலீஸ்கார்கள் பாதுகாப்புடன் முருகன் சிலை கும்பகோணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications