கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு முன் மீனவர்களை விடுவிக்க வேண்டும்.. மோடிக்கு முதல்வர் கடிதம்
கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி க
சென்னை: இலங்கை சிறையில் உள்ள 53 மீனவர்களை, அந்தோணியார் திருவிழாவிற்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 53 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளை விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஒரே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், பாக் நீரிணையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களும் சிறைபிடிக்கப்படுகின்றனர் என்றும் பாக் நீரிணையில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கச்சத் தீவில் நடைபெறும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில் கச்சத்தீவில் அந்தோணியார் ஆலய திருவிழா நடக்க உள்ளதால், அதற்கும் முன்பாக தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்க வழிவகை செய்துத் தரப் பட வேண்டும் என்றும் முதல்வர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், கச்சத்தீவை மீட்பதே மீனவர்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்றும் பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications