ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு.. முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தற்காலிக நிம்மதி!
நாமக்கல்லில் உள்ள நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் பெற்றார்.
நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம். நாமக்கல்லில் உள்ள பண்ணை வீட்டில் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் அருகே இருந்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். இருப்பினும் சுப்பிரமணியன் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சுப்பிரமணியன் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தில் எம்எல்ஏ பழனியப்பனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பழனியப்பனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.
அவர் கூர்க் ரிசார்டில் இருந்ததால் ஆஜராகவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி பழனியப்பன் கடந்த 13-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.
அதன்படி பழனியப்பனுக்கு முன்ஜாமீன் வழங்க கடந்த 19-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நாமக்கல் நீதிமன்றத்தில் இன்று பழனியப்பன் ஆஜரானார். அப்போது உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து முன்ஜாமீன் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications