ரணகளத்திலும் இந்த சென்னைவாசிக்கு கிளுகிளுப்பு கேட்கிறது!
சென்னை: சென்னையில் பெய்துள்ள கனமழையால் பழவந்தாங்கல் சுரங்பாதையில் நீர் தேங்கியுள்ளது. அங்கு ஒருவர் சுரங்கப்பாதையை நீச்சல் குளம் போன்று நீரில் குதித்து குளித்துள்ளார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்கள் மொட்டை மாடியில் வசிக்கும் நிலைமை உள்ளது. இந்நிலையில் இந்த ரணகளத்திலும் ஒருவர் கிளுகிளுப்பாக இருந்துள்ளார்.
LOL... 😂😂😂
A guy is using #Palavanthangal Subway as his Swimming pool.. 😂😂
#ChennaiFloods #ChennaiRains #Chennai pic.twitter.com/1wZ4OV4Hf3
— Mahesh Kumar (@maheshkumarse) November 16, 2015 சென்னை பழவந்தாங்கலில் உள்ள சுரங்க பாதையில் நீர் தேங்கி குளமாக உள்ளது. இந்நிலையில் ஒருவர் பழவந்தாங்கல் சுரங்கப் பாதையை நீச்சல் குளமாக நினைத்து ஜாலியாக நீரில் குதித்து குளித்துள்ளார்.
அவர் நீரில் குதித்தை பார்த்து அங்கிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications