உக்கிரன்கோட்டையி்ல் புதை்து கிடக்கும் “பாண்டியர்கள்” கோட்டை – அகழ்வாராச்சியில் கண்டுபிடிப்பு
நெல்லை: நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில் பாண்டியர் கால பழப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
அங்கு கோட்டை உள்பட பலவும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை அருகே அழகியபாண்டியபுரத்தை அடுத்த உக்கிரன்கோட்டை வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும்.

சுற்றிச் சூழ்ந்த கோட்டைகள்:
பாண்டிய மன்னர்கள் கோட்டை கட்டி வாழ்ந்ததற்கான சரித்திர சான்றுகள் அந்த ஊரை சுற்றிலும் காணப்படுகின்றன. மதுரையை ஆண்ட பராந்தக வீரநாராயணன் என்னும் உக்கிர பாண்டியன் நாட்டின் பாதுகாப்பிற்காக பல்வேறு இடங்களில் கோட்டை கொத்தளங்களை அமைத்தான்.
வரலாற்றுச் சான்றுகள்:
நெல்லை அருகே உக்கிரன்கோட்டையும், அம்மன்னரின் ஆட்சி காலத்தை குறிப்பிடும் வகையில் வரலாற்று சான்றுகளை உள்ளடக்கி காணப்படுகிறது.
ஆய்வுக்கு அனுப்ப முடிவு:
இந்த நிலையில் சென்னையில் இருந்து தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் வசந்தி, ஆற்காடு காப்பாட்சியர் ரஞ்சித், கல்வெட்டு ஆய்வாளர் பாஸ்கர், தொல்லியல் ஆய்வாளர்கள் ஜெயராஜ், சங்கரநாராயணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் உக்கிரன்கோட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள பொருட்களை ஆய்வு செய்தனர். அங்கு கிடைத்த பொருட்களை சோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
பழமையான் பொருட்கள்:
இதுகுறித்து தொல்லியல் துறை துணை கணகாணிப்பாளர் கூறுகையில், "பழமையான உக்கிரன்கோட்டையில் 5 இடங்களில் 10 அடி ஆழமுள்ள குழிகள் தோண்டப்பட்டு பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இங்கு கோட்டை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அந்த காலத்தில் ஆயுதங்கள் தயாரிக்க குடிசபல் என்னும் பழங்கால பானையில் உலோக பொருட்களை உருக்கியுள்ளனர்.
வணிகத் தொடர்பும் அதிகம்:
அந்த பானைகள் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. ரோமன் துணிகளும் இங்கு கிடைத்துள்ளதால் வணிக தொடர்பும் தெரிய வருகிறது. இந்த ஊரில் நந்திகள் நிறைய கிடைப்பதால் சிவ வழிபாடு இருந்திருக்கலாம் என தெரிகிறது. தொடர்நது சோதனை நடத்துவோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications