விண்ணை அதிரவைத்த அரோகரா சரணகோஷம்..வெகுவிமரிசையாக பழனி பங்குனி உத்திர திருத்தேரோட்டம்!
பழனி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா சரணகோஷத்துடன் திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

பங்கு உத்திர காலத்தில் பழனி முருகன் கோவிலுக்கு கொடுமுடி உள்ளிட்ட புனிதத் தலங்களில் இருந்து காவடிகளில் பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருவது வழக்கம். பழனி முருகன் கோவிலில் உள்ள சிலை நவபாஷானத்தால் உருவாக்கப்பட்டது. தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகம் என்பதால் முருகக் கடவுளை குளிர்விக்க இத்தகைய தீர்த்த காவடிகளை பக்தர்கள் எடுத்து வருவது வழக்கம்.

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடபெற்றது. இத்திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் பங்கேற்றனர்.

பங்குனி உத்திரநாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு சண்முக நதியில் முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வானை சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். இதனையடுத்து காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு திருஆவினன்குடியில் தந்தப் பல்லக்கில் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

முற்பகல் 11.30மணிக்கு வடக்கு கிரிவீதியில் முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார். இதனையடுத்து பல்வேறு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் மாலையில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
VIDEO | Devotees throng Palani, Tamil Nadu to attend Panguni Uthiram Chariot festival.
— Press Trust of India (@PTI_News) March 24, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/s02U6MdQFB
திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, பழனி நகர பிரமுகர்கள் பங்கேற்றனர். அப்போது பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என எழுப்பிய சரணகோஷம் விண்ணை அதிர வைத்தது. அனைத்து கிரிவீதிகளிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் உலா வந்தது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications