பரமக்குடி துப்பாக்கிச்சூடு தற்காப்பு நடவடிக்கைதான்... விசாரணை கமிஷன் தகவல்

கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் இம்மானுவேல் குருபூஜையின் போது பரமக்குடியில் கலவரம் ஏற்பட்டது. அப்போது கலவரக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிஷன் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பயனளிக்கவில்லை என்றும், நடவடிக்கைகள் பயனில்லாமல் போனதால் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிடப்பட்டது மேலும், வன்முறையை தடுக்க துப்பாக்கிச்சூடு அவசியமாக இருந்தது என விசாரணை ஆணையம் கருதுகிறது என்றும், துப்பாக்கிச்சூடு நடத்தாமல் இருந்திருந்தால் தென் மாவட்டங்களுக்கு வன்முறை பரவியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications