சுட்டெறிக்கும் வெயிலுக்கிடையே பள்ளிகள் திறப்பா? தள்ளி வைக்க பெற்றோர் வலியுறுத்தல்...
சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் வேளையிலும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பெற்றோர், மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளளனர்.
பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறிவித்தபடி வரும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை நேற்று அறிவித்தது. இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டும், மாணவர்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டும், ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெயிலின் தாக்கததால் ஏற்படும் சின்னம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும் இது ஏதுவாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று, வெயில் அதிகமாக இருந்ததால் கடந்த 2013 ஆம் ஆண்டு பள்ளிகள் திறப்பதை 10 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், அந்த சமயத்தில் 105 டிகிரி வெயில் தான் இருந்தது என்றும், தற்போது 108 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பெரியவர்களாலேயே வெளியில் செல்ல முடியாத நிலையில் மாணவ-மாணவிகள் எப்படி இந்த வெயிலை தாங்குவார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், எனவே பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications