சசிகலாவுக்கு கிடைக்கும் பரோலை தடுப்பது மனிதாபிமானமற்றச் செயல்.. தா.பாண்டியன் காட்டம்
சசிகலாவுக்கு கிடைக்கும் பரோலை தடுப்பது மனிதாபிமானமற்றச் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
சென்னை: சசிகலாவுக்கு கிடைக்கும் பரோலுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவது மனிதாபிமானமற்றச் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கடுமையாக விமர்சித்தார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் இரு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உறுப்பு தான மையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கணவரை அருகில் இருந்து பார்த்து கொள்வதற்காக சசிகலா கர்நாடக சிறைத் துறை டிஜிபியிடம் பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார்.
அவரது பரோல் மனுவை அதிகாரிகள் ஆராய்ந்த போது அந்த மனுவில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதால் அவற்றை சரிசெய்து மீண்டும் அனுப்பமாறு அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். ஆனால் அவருக்கு பரோல் கிடைக்கக் கூடாது என்பதற்காக தமிழக அரசு தடங்கல்களை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று நடராஜனுக்கு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக செய்யப்பட்டது. அப்போது நடராஜனை சந்திக்க தா.பாண்டியன் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர் கூறுகையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு விழிப்போடு சுறுசுறுப்போடு செயல்பட வேண்டும்.
போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனையில் இல்லை என்பதை தமிழக அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். நோய்வாய்பட்டிருக்கும் கணவரை காண ஒரு பெண்ணுக்கு பரோல் கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படுத்தப்படுவது மனிதாபிமானமற்ற செயல் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications