Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை முழு அடைப்புப் போராட்டம்... விழுப்புரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்! - வீடியோ

நாளை நடக்கவுள்ள முழு அடைப்புப் போராட்டம் குறித்து, திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

தமிழகத்தில் மழை பொய்த்த காரணத்தால் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சி நிலவுவதால் பயிர்கள் கருகி நாசமாகியது. இதைக் கண்டு வேதனையடைந்த 220க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

 All party meeting held at vilupuram

தமிழகத்தில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்ளூம் துயரம் கடந்த ஆண்டிலிருந்துதான் அதிக அளவில் நடைபெர்று வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 41 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். அவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார்.

அதன்பிறகு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழுஅடைப்புப் போராட்டம் நாளை நடத்தப்படும் என அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி முடிவெடுத்தது. இந்நிலையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில், விழுப்புரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

இதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. பாமக, தமாக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நாளை முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+