நாளை முழு அடைப்புப் போராட்டம்... விழுப்புரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்! - வீடியோ
நாளை நடக்கவுள்ள முழு அடைப்புப் போராட்டம் குறித்து, திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்: தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
தமிழகத்தில் மழை பொய்த்த காரணத்தால் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சி நிலவுவதால் பயிர்கள் கருகி நாசமாகியது. இதைக் கண்டு வேதனையடைந்த 220க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்ளூம் துயரம் கடந்த ஆண்டிலிருந்துதான் அதிக அளவில் நடைபெர்று வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 41 நாட்களாகப் போராட்டம் நடத்தினர். அவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார்.
அதன்பிறகு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழுஅடைப்புப் போராட்டம் நாளை நடத்தப்படும் என அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி முடிவெடுத்தது. இந்நிலையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில், விழுப்புரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.
இதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. பாமக, தமாக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நாளை முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
யார் யாருக்கோ சீட்? தொண்டர்களைப் புறக்கணிக்கும் திருமா? - விசிகவில் வெடிக்கும் குழப்பம்! -
“ஜெயிலுக்கு போக இருந்த எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றிய 2 பேர்”.. ஓபிஎஸ் பேச்சு! -
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
“இதைச் சொல்லி பிரச்சாரம் செய்வீர்களா?” தமிழகம் வரும் பாஜக தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்! -
“வெற்றி வாய்ப்பு சூப்பரா இருக்கு.. 234 தொகுதிகளிலும் வெல்வோம்”.. கேட்டதுமே அழுத்தமாக சொன்ன ஸ்டாலின்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
“எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?” - உதயநிதி ஸ்டாலின் சொன்ன மேட்டர்! -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. முன்னாள் எம்பி விஸ்வநாதனுக்கு வாய்ப்பு! -
“விஜய் பிரிக்கப்போவது எல்லாம் திருமாவளவன் கட்சி வாக்குகளைத்தான்.. NDAவுக்கு பாதிப்பில்லை” - எச்.ராஜா -
இலவச மழையில் புதுச்சேரி: யார் டாப்? விஜய்? ரங்கசாமி? காங்கிரஸ் பிழைக்குமா? -
விசிக வேட்பாளர்களுக்கு 3 தொகுதிகளில் வாக்களிக்க வேண்டாம்.. திருமாவளவனே சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications