காமராஜர் சிலையை சீரமைக்க கோரிக்கை – பாவூர் சத்திரத்தில் மக்கள் போராட்டம்
பாவூர் சத்திரம்: ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் சிலை சேதப்படுத்தப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும்,உடனடியாக சிலையை தமிழக அரசு சீரமைக்க வலியுறுத்தியும்,குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரத்தில் நேற்று மாலை ஒரு சமூக மக்கள் சார்பில் தென்காசி -நெல்லை தேசிய நெடுஞ்சாலையில்சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது செங்கோட்டையிலிருந்து ஆலங்குளம் வழியாக சென்னை அரசு விரைவு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.அந்த பேருந்தை ஓட்டுனர் ரெங்கராயலு என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்த போது திடீர் என கூட்டத்தில் இருந்த யாரோ சில மர்ம நபர்கள் பேருந்து மீது கல்வீசியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
இதனை சற்றும் எதிர் பாராத ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார்.இதன் காரணமாக பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து ஓட்டுனர் ரெங்கராயலு,பாவூர் சத்திரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து பாவூர் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications