வள்ளுவர் விழாவில் ‘நயன்தாரா’வின் புகழ் பாடிய பழ.கருப்பையா!
விருதுநகர்: தற்போது நயன்தாராவுக்கு ரசிகர்கள் அதிமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு முன்னர் ஒரு நடிகை இருந்த இடத்தை அவர் பிடித்துள்ளார் என பொருள். ஆனால், இது புகழ் அல்ல. எக்காலத்திலும் வள்ளுவர் புகழை மற்றொருவர் பிடிக்க முடியாது என துறைமுகம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையில் திருவள்ளுவர் மன்றத்தின் 51-வது ஆண்டு விழா மன்ற கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நிகழ்ச்சியில் துறைமுகம் தொகுதியின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் பழ. கருப்பையா சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-

தமிழின் சிறப்பு...
இந்தியாவை ஆள வந்த ஆங்கிலேயர்கள் வந்த வேலையை விட்டு விட்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றனர். அந்த அளவுக்கு தமிழ் சிறப்பு பெற்றது.

பழைய வழக்கம்...
இந்தியர்களை அடிமையாக வைத்திருந்த ஆங்கிலேயர்கள் தனியாக இருப்பார்கள். எனவே அவர்களுக்கு இந்தியர்கள் பயப்பட வேண்டும் என்பதற்காக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதைகள் குறித்த புத்தகம் பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அதே நிலை தற்போதும் நீடிக்கிறது.

அதே நடைமுறை...
ஆளுநர் வருவதற்கு முன்னாலே அனைவரும் எழுந்திருக்க வேண்டும் என்ற சட்டம் புத்தகத்தில் உள்ளது. ஆளுநர் வந்த பின்னர் தமிழ்தாய் வாழ்த்து அவருக்கு தெரியாது என்பதால் அவரது இருக்கையில் அமர்ந்து விடுவார். பின்னர் அவரது உதவியாளர் முறைகளை கூறிய பின்னர் எழுந்து நிற்பார். இப்படி ஆங்கிலேயன் இந்தியர்களை பயமுறுத்துவதற்கான நடைமுறைகள் இன்று வரை தொடர்ந்து வருகிறது.

ஊழல் அரசியல்வாதிகள்...
பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கூட காவல்துறை வாகனத்தில் ஏற்றும்போது நாணத்தால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். ஆனால் லஞ்ச வழக்கில் சிறை செல்லும் அரசியல்வாதிகள் மக்களை பார்த்து கை அசைத்துக் கொண்டே செல்கின்றனர்.

நயன்தாரா புகழ்...
தற்போது நயன்தாராவுக்கு ரசிகர்கள் அதிமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு முன்னர் ஒரு நடிகை இருந்த இடத்தை பிடித்துள்ளார். ஒருவரது புகழ் என்பது அவர் இடத்திற்கு மற்றொருவர் வரும் போது புகழ் புகழால் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இது புகழ் அல்ல. எக்காலத்திலும் வள்ளுவர் புகழை மற்றொருவர் பிடிக்க முடியாது'' என்றும் தெரிவித்தார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications