புரட்சி பாரதம் செயற்குழுவில் அதிமுக வேட்பாளர் அறிமுகம்
சென்னை: அதிமுக சார்பில் திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் வேணுகோபால், புரட்சி பாரதம் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டார்.
அவரது வெற்றிக்கு தீவிரமாக உழைக்கவும் புரட்சி பாரதம் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பூவை எம் ஜெகன் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
16 வது நாடாளுமன்ற தேர்தல் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் அவசர செயற்குழு கூட்டமும் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுகமும் பூவிருந்தவல்லி சுந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புரட்சி பாரதம் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார்..

அதிமுக வேட்பாளர் வேணுகோபால், அமைச்சர் ரமணா, ஜேசிடி.பிரபாகர் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர், பூவிருந்தவல்லி நகராட்சித் தலைவர் திருநாவுக்கரசு , எம்.எல்.ஏ. மணிமாறன் மற்றும் புரட்சி பாரதம் மாநில, மாவட்ட , ஒன்றிய, நகர, கிளை செயலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு 40 தொகுதியிலும் வெற்றி பெற புரட்சி பாரதம் தீவிரமாக தேர்தல் பணியாற்றி, முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் ஆக்க பாடுபடுவோம் என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு புரட்சி பாரதம் தலைவர் பூவை எம். ஜெகன்மூர்த்தி பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.












Click it and Unblock the Notifications