அன்புமணி போட்டியிடும் பென்னாகரத்தில் ஓட்டுக்களை குத்தி தள்ளிய வாக்காளர்கள்! தமிழகத்திலேயே அதிகம்
சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் பென்னாகரம் மற்றும் எடப்பாடி ஆகிய தொகுதிகளில் 85 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் முழுவதும், மாலை 5 மணி நிலவரப்படி 69.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் மிக அதிகமாக பென்னாகரம் மற்றும் எடப்பாடி ஆகிய தொகுதிகளில் தலா 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் இரவு 8 மணியளவில் வெளியாகும் என்று தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தெரிவித்தார். எனவே இந்த சதவீதம் 90 அளவுக்கு உயர வாய்ப்புள்ளது.

அன்புமணி போட்டியிடும் பென்னாகரத்தில் பணமழை பொழிவதாக பாமக குற்றம்சாட்டியிருந்தது. எனவே அன்புமணியை வெற்றிபெறச் செய்ய பாமகவினர் திரளாக வந்து வாக்குகளை அள்ளி தெளித்தனரா அல்லது, பிற கட்சிகள் வற்புறுத்தலால் அன்புமணிக்கு எதிராக இவ்வளவு ஓட்டுக்கள் விழுந்தனவா என்பது மே 19ல் தெரியும்.












Click it and Unblock the Notifications