சிங்கம் 3 பட பாணியில் தூத்துக்குடியில் கொட்டப்பட்ட வெளிநாட்டு கழிவுகள்.. மக்கள் அதிர்ச்சி!
தூத்துக்குடி அருகே சிங்கம் 3 பட பாணியில் வெளிநாட்டு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே சிங்கம் 3 பட பாணியில் வெளிநாட்டு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே காட்டுப் பகுதியில் கொட்டப்பட்ட வெளிநாட்டு கழிவுகளால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வெளிநாட்டில் இருந்து மின்னணு மற்றும் மருத்துவ கழிவுகள் 10 கன்டெய்னர்களில் கொண்டுவரப்பட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே கொட்டப்பட்டுள்ளன.

வெளிநாட்டு கழிவுகள்
ஸ்ரீவைகுண்டம் அருகே காட்டுப் பகுதியில் இந்த வெளிநாட்டு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. மக்கள் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில் உயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

சிங்கம் 3 படத்தை போல்
இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கம் 3 படத்தில் வெளிநாட்டில் இருந்து மருத்துவ மற்றும் மின்னணு கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

மருத்துவ கழிவுகள்
இந்த வெளிநாட்டு மருத்துவ கழிவுகள் எரிக்கப்படும் போது அவற்றிலிருந்து வெளியேறும் நச்சுவாயுவால் அப்பாவி குழந்தைகள் இறப்பது போன்றும் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஏஜென்டுகள் உள்ளனரா?
இந்நிலையில் அந்தப் படத்தை போலவே வெளிநாட்டு கழிவுகள் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் கொட்டப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மூலம் தூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் கொட்டப்பட்டனவா அல்லது தமிழகத்திலேயே அதற்கு ஏஜென்டுகள் உள்ளனரா என சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications