திருவனந்தபுரம் மக்கள் அவரை 'கலாம் ஐயர்' என்று அழைத்தார்கள்: நண்பர் ஆராவமுதன்
சென்னை: திருவனந்தபுர மக்கள் அவரை கலாம் ஐயர் என்று தான் அழைத்தார்கள் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நண்பர் ஆராவமுதன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 1950களில் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து இறுதி வரை சைவப் பிரியராக இருந்தார். வறுமையின் காரணமாக சைவத்திற்கு மாறிய அவருக்கு அதுவே பிடித்த உணவாகிவிட்டது.
இந்நிலையில் இது குறித்து கலாமின் நண்பரும், சக ஊழியரும், பெங்களூர் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் தலைவருமான ஆராவமுதன் கூறுகையில்,

திருவனந்தபுரம்
நானும், கலாமும் 1964ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் தும்பா ராக்கெட் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். கேரளா அல்லாத தென்னிந்திய சாப்பாடை சாப்பிட நாங்கள் தினமும் பத்து நிமிடம் நடந்து ரயில் நிலையத்திற்கு செல்வோம்.

கேன்டீன்
தும்பா நிலையத்தில் கேன்டீன் இல்லை. அருகில் உள்ள இடங்களில் நாங்கள் விரும்பும் உணவு கிடைக்காது. அதனால் தான் ரயில் நிலையத்திற்கு சென்று அங்குள்ள கடையில் சாப்பிடுவோம்.

கலாம் ஐயர்
திருவனந்தபுரத்தில் நாங்கள் இந்திரா பவன் லாட்ஜில் தங்கியிருந்தோம். அங்குள்ள மக்கள் அவரை கலாம் ஐயர் என்பார்கள். ஏனென்றால் அவர் பிராமணர்களுடன் சுற்றுவார். மேலும் அவர்களை போன்று உணவு பழக்கவழக்கம் உள்ளவர்.

முட்டை மசாலா
கலாம் சாப்பிட்ட ஒரே அசைவ உணவு கேரளா பரோட்டாவும், முட்டை மசாலாவும் தான். நான் கடந்த 1963ம் ஆண்டு அமெரிக்காவில் தான் கலாமை முதலில் சந்தித்தேன். அங்கு நாங்கள் உருளைக்கிழங்கு, பீன்ஸ், பிரெட் மற்றும் பால் ஆகியவற்றை தான் உட்கொண்டோம். வார இறுதி நாட்களில் சினிமா, ஷாப்பிங் என்று அசத்துவோம். அவ்வப்போது ஒரு இந்தியரின் வீட்டில் சாப்பிடுவோம் என்றார் ஆராவமுதன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications