இதுவா தற்காப்புக்காக சுடுவது?.. கேள்வி எழுப்பும் மக்கள்
Recommended Video

சென்னை: தற்காப்புக்காகவே போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கூற்றுக்கு சமூக வலைதளங்களில் மக்கள் பல்வேறு வகையில் கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக பெரும் அதிருப்தியும், கொதிப்பும், கோபமும் மக்களிடையே நிலவி வருகிறது. மக்களுக்கு ஆறுதல் தரும் வகையிலான விளக்கம் எங்கிருந்தும் இதுவரை வரவில்லை.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கூட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவது போலவே பேசினார். உங்களை ஒருவர் அடிக்க வந்தால் பதிலுக்குத் தாக்குவீர்களா மாட்டீர்களா என்றும் செய்தியாளர்களிடம் கேட்டார். அதுபோலத்தான் இதுவும் தற்காப்புக்காக நடந்தது என்றும் அவர் விளக்கினார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
|
இதுவா தற்காப்பு
இதையா தற்காப்புக்காக சுடுவது என்று சொல்கிறீர்கள்?
|
உங்களிடமிருந்து காத்துக் கொள்வது எப்படி
உங்களிடமிருந்து எங்களை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்று தெரியவில்லையே!
|
தற்காப்புக்காக ஸ்னைப்பர் துப்பாக்கியா
நீண்ட தூரம் குறி பார்த்து சுடக் கூடிய ஸ்னைப்பர் துப்பாக்கிகள் கூட தற்காப்பின் ஒரு பகுதியா?
|
இதுவும் கூட தற்காப்புக்காகத்தானா
வேன் மீது ஏறி எஸ்எல்ஆர் துப்பாக்கியால் குறி பார்த்து சுடுவதும் கூட தற்காப்புக்காகத்தானா.. அருமை.. மிக அருமை.












Click it and Unblock the Notifications