For Daily Alerts
Just In
வெயிலின் தாக்கத்தை தணிக்க முல்லைப் பெரியாறு அணையில் குளித்து மகிழும் மக்கள்!- வீடியோ
வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணையில் மக்கள் குளித்து மகிழ்ச்சியடைகின்றனர்.
தேனி: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனை தணிக்கும் வகையில் முல்லைப் பெரியாறில் மக்கள் குளித்து மகிழ்ச்சியடைகின்றனர்.
பருவ மழை பொய்த்துப் போனதால் முல்லை பெரியாறு அணிநீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் விவசாயத்துக்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் கோடை வெப்பத்தை தணிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முல்லை பெரியாறில் குளித்து மகிழ்கின்றனர்.
சுற்றுவட்டார பகுதிகளான கம்பம், கூடலூர் உத்தம பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் தற்போது முல்லை பெரியாறுக்கு படை எடுக்க தொடங்கியுள்ளனர்.
English summary
People enjoying in Mullai periyar dam to tackle the heavy tempreture. childrens and adults taking bath in the dam.
Story first published: Thursday, May 4, 2017, 15:41 [IST]