மெரினாவில் நொடிக்கு நொடி கூடுகிறது கூட்டம்.. கடல் அலையை மிஞ்சும் மனித தலைகள்
வாகனங்களை நிறுத்தவும் இடமில்லை என்பதால், ஏராளமான இளைஞர்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே போராட்டக் களமான மெரினா வருகிறார்கள்.
சென்னை: நொடிக்கு நொடி பெருகும் எண்ணிக்கையால் மனித கடலாக சென்னை மெரினா கடற்கரை மாறியுள்ளது. இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பல இடங்களில் இருந்து மெரினாவுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணியாக வந்து சேர்ந்தனர்.
அனைத்து சாலைகளும் ரோமை நோக்கி என்ற ஆங்கிலத்தில் பிரபலமான வார்த்தை, இன்று அனைத்து சாலைகளும் மெரினாவை நோக்கி.. என மாறிப்போயுள்ளது.

ஆயிக்கணக்கான இளைஞர்கள் வருவதால் பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.
வாகனங்களை நிறுத்தவும் இடமில்லை என்பதால், ஏராளமான இளைஞர்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே போராட்டக் களமான மெரினா வருகிறார்கள். சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் குவிந்து வருவதால் மெரினாவுக்கு செல்லும் சாந்தோம் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. மேலும் பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டிய லூப் சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் எங்கெங்கு காணினும் மனித தலைகளாகவே தெரிகின்றன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications