ஜெ.சமாதிக்கு வந்த சசிகலா.. கண்டு கொள்ளாத மக்கள்.. "காக்கா" மட்டும் கத்திய பரிதாபம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா வந்தபோது அவரைக் காண மக்கள் சற்றும் ஆர்வம் காட்டவில்லை. அவருடன் மன்னார்குடி கூட்டமும், கட்சியின் ஒ!ரு சில நிர்வாகிகளும் மட்டுமே கூட இருந்தனர்.
இன்று ஜெயிலுக்குப் புறப்பட்டு விட்ட சசிகலா, போகும் முன்பு ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்தார். அங்கு சாமி கும்பிடுவது போல கும்பிட்டார். பின்னர் குனிந்து சமாதியை 3 முறை பலமாக தட்டினார். தலையில் அடிப்பது போல இருந்தது அவர் தட்டியது.

அப்போது அவருடன் கூட வந்திருந்த மன்னார்குடி கூட்டம் மட்டும் சின்னம்மா வாழ்க என்று கத்திக் கூச்சலிட்டது. அந்தப் பகுதியில் பொதுமக்களோ, அதிமுகவினரோ சுத்தமாக கண்டு கொள்ளவில்லை. மன்னார்குடி கூட்டமும், கோகுல இந்திரா, பா வளர்மதி போன்ற சில தெரிந்த முகங்களை மட்டுமே காண முடிந்தது.












Click it and Unblock the Notifications