நெல்லை கடையநல்லூரில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து போராட்டம்!
நெல்லை கடையநல்லூரில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
நெல்லை: நெல்லை கடையநல்லூரில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் மேலகடையநல்லூரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக மக்கள் கடந்த சில மாதங்களாக போராடி வருகிறார்கள். அந்த கடைக்கு அருகில் பள்ளி கூடம், கோவில்கள், வீடுகள், கடைகள் உள்ளது. இதனால் அங்கு செல்லும் மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

டாஸ்மாக் கடை இருப்பதால் அங்கு அடிக்கடி பிரச்சனை நடந்து வருகிறது. மக்கள் இதற்கு எதிராக கடந்த சில நாட்களாக போராடி வருகிறார்கள். ஆனால் டாஸ்மாக் கடை இன்னும் மூடப்படவில்லை.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே தீ வைத்தனர். தீ வைத்ததில் மதுபாட்டில்கள் எரிந்தது.

மதுபாட்டில் என்பதால் வரிசையாக தீ வேகமாக பரவியது. தற்போது அந்த கடையில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு படை வீரர்கள் அணைத்து வருகிறார்கள். தீ வைத்த நபர்கள் அடையாளம் காணப்படவில்லை.













Click it and Unblock the Notifications