மழை நின்ற பிறகும் இடுப்பளவு தண்ணீரில் தத்தளிக்கும் திருநின்றவூர்
சென்னை: திருநின்றவூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பெய்த கனமழையால் திருநின்றவூரில் உள்ள பெரியார்நகர், முத்தமிழ் நகர், திருவேங்கடம் நகர் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. இந்தப் பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் வெள்ள நீர் வடிய தொடங்கியது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் குளம்போல தேங்கி நிற்கிறது.

அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள், பேரல்களை படகு போல் கட்டி நீந்தி கடைகளுக்கு வந்து அத்தியவாசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். பெரும்பாலானோர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஏராளமானோர் தண்ணீரில் தத்தளித்தப்படி வீடுகளிலேயே தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகள் அருகே திருநின்றவூர் ஏரி உள்ளது. தற்போது ஏரி நிரம்பி இருப்பதால் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியாமல் நிற்கிறது. பெரியார் நகர், முத்தமிழ்நகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய மழை நீர் இதுவரை அகற்றப்படாததால் சாக்கடையாக மாறி விட்டது. இதனால் பலருக்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதிகாரிகள் இப்பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications