For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜநாயகத்தின் கருத்து கணிப்பு அப்படியே பலிக்கிறதே! அடடா....

மக்கள் ஆய்வு மைய அமைப்பின் தலைவர் ராஜநாயகம் தனது கருத்து கணிப்பில் தினகரன்தான் வெற்றி பெறுவார் என்று கூறியிருந்தது தற்போது பலித்து விட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரனின் கல கல பேட்டி- வீடியோ

    சென்னை: மக்கள் ஆய்வு மைய அமைப்பின் தலைவர் ராஜநாயகம் தனது கருத்து கணிப்பில் தினகரன்தான் வெற்றி பெறுவார் என்று கூறியிருந்தது தற்போது பலித்துவிட்டது.

    ஆர்.கே. நகருக்கு 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவியது.

    மேலும் இரட்டை இலை சின்னத்தை போராடி பெற்ற அதிமுகவுக்கு இந்த தேர்தல் என்பது கடும் சவாலாகவே இருந்தது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    டிடிவி தினகரன் வெற்றி

    டிடிவி தினகரன் வெற்றி

    இந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்திலிருந்தே டிடிவி தினகரன் முன்னிலையில் இருந்தார். இறுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு அமோகமாக வெற்றி பெற்றுவிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்தான் வெற்றி பெறுவார் என்று மக்கள் ஆய்வு மைய அமைப்பு கருத்து கணிப்பில் கூறியிருந்தது.

    கருத்து கணிப்பு பலித்து விட்டது

    கருத்து கணிப்பு பலித்து விட்டது

    முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் மற்றும் அவரது அணியினர் எடுத்த கருத்துக் கணிப்பு தற்போது மெய்யாகிவிட்டது. சின்னம், வேட்பாளர், தனித்திறமை உள்ளிட்ட பிரிவுகளில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னத்தை 91.6 சதவீதம் பேர் அடையாளம் கண்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

    சின்னம் அடையாளம்

    சின்னம் அடையாளம்

    பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பில் இரட்டை இலை சின்னம் 81.1 சதவீதம் பேரால் அடையாளம் காணப்பட்டு உள்ளது. பிரஷர் குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்ட ஓரிரு நாள்களிலேயே ஏறத்தாழ தொகுதி முழுவதும் அது குறித்த தகவல் நன்றாக சென்று சேர்ந்துவிட்டது.

    கருத்து கணிப்புகள் பலித்தன

    கருத்து கணிப்புகள் பலித்தன

    ஆர்.கே.நகரில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என ராஜநாயகம் அணியினர் கேட்ட கேள்விக்கு, டி.டி.வி.தினகரனுக்கு 35.5 சதவீதமும், மருது கணேஷுக்கு 28.5 சதவீதமும், மதுசூதனனுக்கு 21.3 சதவீதமும், பா.ஜ.க., வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு 1.5 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என கருத்து கணிப்பில் வெளியானது.

    English summary
    TTV Dinakaran won the RK Nagar by poll. Ex Professor Rajanayagam and his team's survey about candidate's performance who are in the fray in RK Nagar goes true now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X