வேலையைத் திருப்பிக் கொடு.. பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய மக்கள் நலப் பணியாளர்கள்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தங்களுக்கு மீண்டும் வேலை அளிக்கக் கோரி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 125 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 13 ஆயிரத்து 500 மக்கள் நல பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில்இன்று ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
இதனையடுத்து நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஈர துணியை வயிற்றில் கட்டிக்கொண்டும் கைகளில் மண் சட்டி ஏந்திக்கொண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர். சிலர் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு அரை நிர்வாணக் கோலத்திலும் காட்சியளித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று வடசேரி பஸ் நிலையத்திற்குள் நுழைந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் பஸ் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து மறியலிலும் ஈடு பட்டனர். இதனால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 125 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேன்களில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications