வேலையைத் திருப்பிக் கொடு.. பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய மக்கள் நலப் பணியாளர்கள்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தங்களுக்கு மீண்டும் வேலை அளிக்கக் கோரி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 125 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 13 ஆயிரத்து 500 மக்கள் நல பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில்இன்று ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
இதனையடுத்து நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஈர துணியை வயிற்றில் கட்டிக்கொண்டும் கைகளில் மண் சட்டி ஏந்திக்கொண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர். சிலர் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு அரை நிர்வாணக் கோலத்திலும் காட்சியளித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று வடசேரி பஸ் நிலையத்திற்குள் நுழைந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் பஸ் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து மறியலிலும் ஈடு பட்டனர். இதனால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 125 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேன்களில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications