மர்ம மரணங்கள் நிறைந்த கருணை இல்லம்.. முதியவர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை!
காஞ்சிபுரம் அருகே சர்ச்சைக்குள்ளான கருணை இல்லத்தில் விருப்பமின்றி தங்கியுள்ள முதியவர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

காஞ்சிபுரம்: சர்ச்சைக்குள்ளான கருணை இல்லத்தில் விருப்பமின்றி தங்கியுள்ள முதியவர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயின்ட் ஜோசப் கருணை இல்லம் இயங்கி வருகிறது. இந்த கருணை இல்லம் கடந்த ஒரு வாரமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறது.
கருணை இல்லத்துக்கு சொந்தமான போலி ஆம்புலன்ஸ் ஒன்றில் கடந்த வாரம் செங்கல்பட்டு அருகே மூதாட்டி ஒருவர் கடத்தப்பட்டார். ஆம்புலன்ஸ்க்குள் சடலம் இன்று இருப்பதை பார்த்த அவர் காப்பாற்றுமாறு கூச்சலிட்டார்.

300 பேர் பலி
இதையடுத்து கிராமமக்கள் அந்த ஆம்புலன்ஸை மடக்கிப்பிடித்து போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடந்த 3 மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

எலும்புகள் கடத்தல்
மேலும் உயிரிழந்தவர்களின் உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புக்கூடுகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அங்கு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கடத்திசெல்லப்பட்டு அடைப்பு
மேலும் மத்திய உளவுத்துறையினரும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் சாலையோரத்தில் படுத்திருந்தபோது கடத்தி கொண்டுவரப்பட்டு அடைத்து வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கருணை இல்லத்துக்கு நோட்டிஸ் அனுப்பியது. இந்நிலையில் கருணை இல்லத்தில் விருப்பமின்றி தங்கியுள்ளவர்களை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு காப்பகங்களில்..
கருணை இல்லத்தில் விருப்பமில்லாமல் தங்க வைக்கப்பட்டிருக்கும் முதியவர்களை அங்கீகாரம் பெற்ற அரசு காப்பகங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications