சட்டசபை தேர்தலில் மக்கள் அதிமுக, திமுகவை அப்புறப்படுத்துவார்கள்: ராமதாஸ்
விழுப்புரம்: வரும் தேர்தலில் மக்கள் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை அப்புறப்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மது இல்லாத, ஊழல் இல்லாத ஆட்சியை பாமகவால் அளிக்க முடியும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து மாற்றம், முன்னேற்றம் என்ற வார்த்தைகளை கூறி வருகிறோம்.

வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளனர். அதாவது அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை அப்புறப்படுத்துதே அந்த மாற்றம். பாமக ஆட்சியை பிடிக்க உள்ளது.
எங்களின் வரைவு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பாடுபடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications