பாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்
பாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் என்று தமிழிசை குறிப்பிட்டு உள்ளார் .
சென்னை : பாஜகவை மனதில் வைத்து தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என்று ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்து இருக்கமாட்டார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
சென்னை வேப்பேரியில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அவர்களால் இங்கு எந்த காலத்திலும் காலூன்ற முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாரை மனதில் வைத்து பேசினார் என்று தெரியவில்லை.
ஆனால் நிச்சயமாக பாஜகவை மனதில் வைத்து அவர் அப்படி விமர்சித்து இருக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை மனதில் வைத்து கூட அவ்வாறு பேசி இருக்கலாம். தெளிவாக சொன்னால்தான் எதுவும் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் பலரும் பாஜக இங்கு காலூன்ற முடியாது என்கிற கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். காலூன்றவே முடியாத ஒரு கட்சியை பற்றி அவர்கள் ஏன் பேச வேண்டும்? தொடர்ந்து வெளியில் இப்படி பேசி வந்தாலும் உள்ளுக்குள் பாஜக குறித்த பயம் இருப்பதே அதற்குக் காரணம் என்று குறிப்பிட்டார்.
தற்சமயம் பாஜக எந்த கூட்டணியிலும் இல்லை என்றும், யாருடனும் கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வில் பாஜக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்றும் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டு உள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications