தரக்குறைவாக பேசிய வங்கி ஊழியர்கள்... முதல்வருக்கு மக்கள் காட்டமான கடிதம்!
வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக ஒருமையில் பேசிய வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது
நெல்லை: வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக ஒருமையில் பேசிய வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகாவில் ஐ.ஒ.பி வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் பணம் எடுப்பதற்காக தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள், மாற்று திறனாளிகள், முதியோர்கள் உள்ளிட்டோர் வந்து செல்வது வழக்கம்.

பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களிடம் வங்கி ஊழியர்கள் தரக்குறைவாக ஒருமையில் நா கூசும் வார்தைகளால் பேசி வருவதாக புகார் எழுந்துள்ளது. வங்கி மேலாளரின் மோசமான செயலால்தான் விவசாயிகள் சங்கத் தலைவர் வேம்பு கிருஷ்ணன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் மானூர் ஒன்றியத்தில் உள்ள குறிச்சிகுளத்தைச் சேர்ந்த மக்கள், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தின் விவரம் :
ஸ்மார்ட் கார்ட் வைத்து பணம் எடுக்கும் போது ,சில சமயங்களில் கைரேகை சரியாக விழாத காரணத்தால் வங்கிக்கு நேரடியாக சென்று வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கின்றனர். ஆனால் அவர்களிடம் வங்கி ஊழியர்கள் தரக்குறைவாக நடந்து வருவது தொடர் கதையாயிற்று. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இதற்கு காரணமான மானூர் ஐ.ஒ.பி வங்கி மேலாளர், பணம் பட்டுவாட செய்யும் கேஷியர் சுந்தரம்பிள்ளை மற்றும் ஆபிஸ் பாய் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
வங்கி ஊழியர்களுக்கு எதிராக ஊர் மக்களே ஒன்றினைந்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications