பெப்ஸிகோ நிறுவன சிஇஓ பதவியிலிருந்து விலகினார் தமிழர் இந்திரா நூயி!
பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி இந்திரா நூயி தனது பொறுப்பில் இருந்து பதவி விலகி இருக்கிறார்.
சென்னை: பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி இந்திரா நூயி தனது பொறுப்பில் இருந்து பதவி விலகி இருக்கிறார்.
இவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். பெப்ஸிகோ நிறுவனத்தின் முதல் பெண் தலைமை செயலதிகாரி ஆவார் இந்திரா நூயி.
மிகவும் சிறப்பாக செயலாற்றி உலகப் புகழ்பெற்ற இவர் தற்போது தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். புதிய தலைமை செயலதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

பெரிய நிறுவனமாக மாற்றினார்
12 வருடமாக அவர் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருந்துள்ளார். அந்த நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான திட்டங்களையும், ஆலோசனைகளையும் வழங்கி மிக மோசமான நிலையில் இருந்த நிறுவனத்தை பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றார்.

விலகினார்
இந்த நிலையில் பெப்ஸிகோ நிறுவனத்தில் நடந்த உறுப்பினர்கள் கூட்டத்தில், புதிய தலைமை செயலதிகாரி நியமிக்கப்பட்டார். தலைமை செயலதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது பிரிவு நிகழ்விற்கு பெரிய விழா ஒன்று நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பணியாற்றுவார்
அதே சமயம் அவர் தொடர்ந்து நிறுவனத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி அவர் நிறுவனத்தின் கூட்டத்தலைவராக தொடர்ந்து செயல்படுவார். அடுத்த வருடம் இறுதி வரை அவர் இந்த பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய சிஇஓ
ராமன் லகூர்த்தா என்ற நபர் தற்போது பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இந்த துறையில் சிறந்த அனுபவம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications