பெப்ஸிகோ நிறுவன சிஇஓ பதவியிலிருந்து விலகினார் தமிழர் இந்திரா நூயி!
பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி இந்திரா நூயி தனது பொறுப்பில் இருந்து பதவி விலகி இருக்கிறார்.
சென்னை: பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி இந்திரா நூயி தனது பொறுப்பில் இருந்து பதவி விலகி இருக்கிறார்.
இவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். பெப்ஸிகோ நிறுவனத்தின் முதல் பெண் தலைமை செயலதிகாரி ஆவார் இந்திரா நூயி.
மிகவும் சிறப்பாக செயலாற்றி உலகப் புகழ்பெற்ற இவர் தற்போது தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். புதிய தலைமை செயலதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

பெரிய நிறுவனமாக மாற்றினார்
12 வருடமாக அவர் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருந்துள்ளார். அந்த நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான திட்டங்களையும், ஆலோசனைகளையும் வழங்கி மிக மோசமான நிலையில் இருந்த நிறுவனத்தை பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றார்.

விலகினார்
இந்த நிலையில் பெப்ஸிகோ நிறுவனத்தில் நடந்த உறுப்பினர்கள் கூட்டத்தில், புதிய தலைமை செயலதிகாரி நியமிக்கப்பட்டார். தலைமை செயலதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது பிரிவு நிகழ்விற்கு பெரிய விழா ஒன்று நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பணியாற்றுவார்
அதே சமயம் அவர் தொடர்ந்து நிறுவனத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி அவர் நிறுவனத்தின் கூட்டத்தலைவராக தொடர்ந்து செயல்படுவார். அடுத்த வருடம் இறுதி வரை அவர் இந்த பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய சிஇஓ
ராமன் லகூர்த்தா என்ற நபர் தற்போது பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இந்த துறையில் சிறந்த அனுபவம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications