விடியல் பதிப்பகத்தின் ”பெரியார் இன்றும் என்றும்” ஒலிநூல் வெளியீட்டு விழா!
விடியல் பதிப்பகத்தின் வெளியீடான “பெரியார் இன்றும் என்றும்” எனும் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
சென்னை: விடியல் பதிப்பகத்தின் வெளியீடான "பெரியார் இன்றும் என்றும்" எனும் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
விடியல் பதிப்பகத்தின் வெளியீடான "பெரியார் இன்றும் என்றும்" எனும் நூல் மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடைந்து பயனுறக்கூடிய வகையில், ஒலிவடிவ நூலாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அச்சுநூலாக இருக்கும் புத்தகத்தைப் படிக்க இயலாதோர் பயனுறும் வகையில், ஒலிவடிவ நூலாக்கும் முயற்சியில் கடந்த ஆறுமாத காலமாக ஈடுபட்டு வந்த தன்னார்வலர் குழுவொன்று, மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு, தகுந்த ஏற்றஇறக்கம், வியப்பு, வினவு, நிறுத்தற்குறிகளுக்கான ஒலிக்குறிப்புகளுடன் கூடிய, ஆடியோபுக், ஒலிவடிவிலான நூலினைத் தமிழ்மொழியில் படைத்திருக்கின்றனர். எவ்வித மொழிமாற்றச் சிதைவுக்கும் ஆட்பட்டு விடாமல் எளிதாய் ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொள்ளுமுகமாகவும், தமிழ் ஒலியில் இருக்கும் இந்நூலினை உருவாக்கியுள்ளனர்.
சமூகச்சீர்திருத்தப் போராளியான தலைவர் பெரியாரின் உரைகளையும் படைப்புகளையும், மாற்றுத்திறனாளிகள் நுகர்வுக்கு இட்டுச்செல்லக் கூடிய வகையில் ஒலிவடிவத்தில் கொணர முனைந்த இக்குழு, இவ்வொலி நூலினை மாவட்ட, கல்லூரி நூலகத்தைச் சார்ந்த மாற்றுத்திறன்வாசகர்கள் பயனடையக்கூடிய வகையிலும் வெளியிட முடிவு செய்தது.
தலைவர் பெரியாரின் படைப்புகளை ஒலிநூலாக்கும் பணியில் இது முதற்கட்டமென்பதாலும், மாற்றுத்திறனாளிகளின் ஒலிநூல்வழி வாசிப்பினை ஊக்குவிக்கும் பொருட்டும், எதிர்வரும் ஜூலை 14ஆம் நாள், சனிக்கிழமையன்று, 'பெரியார் இன்றும் என்றும்' ஒலிநூல் வெளியீட்டுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 10 - பகல் 12.30 மணி வரை எத்திராஜ் கல்லூரி நூலக வளாகம், 70, எத்திராஜ் சாலை, எழும்பூர்,சென்னை 600008, இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திராவிடர்கழகச் செயலாளர் திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் சிறப்பாளராகப் பங்கேற்று நூலினை வெளியிட்டுப் பேசவுள்ளார். அந்நிகழ்வுக்கு ஆர்வலர்கள் அனைவரும் வந்திருந்து பங்கேற்குமாறு, மாற்றுத்திறனாளிகள் முற்போக்கு அமைப்பினர் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications