விடியல் பதிப்பகத்தின் ”பெரியார் இன்றும் என்றும்” ஒலிநூல் வெளியீட்டு விழா!
விடியல் பதிப்பகத்தின் வெளியீடான “பெரியார் இன்றும் என்றும்” எனும் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
சென்னை: விடியல் பதிப்பகத்தின் வெளியீடான "பெரியார் இன்றும் என்றும்" எனும் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
விடியல் பதிப்பகத்தின் வெளியீடான "பெரியார் இன்றும் என்றும்" எனும் நூல் மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடைந்து பயனுறக்கூடிய வகையில், ஒலிவடிவ நூலாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அச்சுநூலாக இருக்கும் புத்தகத்தைப் படிக்க இயலாதோர் பயனுறும் வகையில், ஒலிவடிவ நூலாக்கும் முயற்சியில் கடந்த ஆறுமாத காலமாக ஈடுபட்டு வந்த தன்னார்வலர் குழுவொன்று, மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு, தகுந்த ஏற்றஇறக்கம், வியப்பு, வினவு, நிறுத்தற்குறிகளுக்கான ஒலிக்குறிப்புகளுடன் கூடிய, ஆடியோபுக், ஒலிவடிவிலான நூலினைத் தமிழ்மொழியில் படைத்திருக்கின்றனர். எவ்வித மொழிமாற்றச் சிதைவுக்கும் ஆட்பட்டு விடாமல் எளிதாய் ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொள்ளுமுகமாகவும், தமிழ் ஒலியில் இருக்கும் இந்நூலினை உருவாக்கியுள்ளனர்.
சமூகச்சீர்திருத்தப் போராளியான தலைவர் பெரியாரின் உரைகளையும் படைப்புகளையும், மாற்றுத்திறனாளிகள் நுகர்வுக்கு இட்டுச்செல்லக் கூடிய வகையில் ஒலிவடிவத்தில் கொணர முனைந்த இக்குழு, இவ்வொலி நூலினை மாவட்ட, கல்லூரி நூலகத்தைச் சார்ந்த மாற்றுத்திறன்வாசகர்கள் பயனடையக்கூடிய வகையிலும் வெளியிட முடிவு செய்தது.
தலைவர் பெரியாரின் படைப்புகளை ஒலிநூலாக்கும் பணியில் இது முதற்கட்டமென்பதாலும், மாற்றுத்திறனாளிகளின் ஒலிநூல்வழி வாசிப்பினை ஊக்குவிக்கும் பொருட்டும், எதிர்வரும் ஜூலை 14ஆம் நாள், சனிக்கிழமையன்று, 'பெரியார் இன்றும் என்றும்' ஒலிநூல் வெளியீட்டுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 10 - பகல் 12.30 மணி வரை எத்திராஜ் கல்லூரி நூலக வளாகம், 70, எத்திராஜ் சாலை, எழும்பூர்,சென்னை 600008, இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திராவிடர்கழகச் செயலாளர் திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் சிறப்பாளராகப் பங்கேற்று நூலினை வெளியிட்டுப் பேசவுள்ளார். அந்நிகழ்வுக்கு ஆர்வலர்கள் அனைவரும் வந்திருந்து பங்கேற்குமாறு, மாற்றுத்திறனாளிகள் முற்போக்கு அமைப்பினர் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு நிபந்தனைகள் தளர்வு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
மண்டைக்கேறிய போதை.. ரம்யாவின் படுக்கையறையில் புகுந்த சென்னை போலீஸ்காரர்.. மறு நொடியே பிக் ட்விஸ்ட் -
மாற்றி யோசித்த சென்னை குடிநீர் வாரியம்.. வேஸ்ட் தண்ணீரில் 551 கோடி ரூபாய் வருமானம்.. எப்படி ? -
சென்னை மக்களே 'கரண்ட் பில்' இன்னும் கட்டவில்லையா.. மின்சார வாரியம் மிக முக்கிய அறிவிப்பு -
சென்னை ரிசார்ட்டில் பல் மருத்துவர் செய்த காரியம்.. ₹11 லட்சத்துக்காக பவர் பத்திரத்தில் ஆடிய ஆட்டம்! -
காது மடல் ஓட்டைகளுக்கு ஆபரேஷன்! சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கிய மும்பை இன்ஸ்டா பிரபலம் கைது! -
“அரசு எங்களை ஏமாத்திருச்சு..” தேர்தல் நேரத்தில் போராட்டத்தை கையில் எடுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை












Click it and Unblock the Notifications