அதிமுக பிரமுகர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...செங்கல்பட்டில் பரபரப்பு !
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு வல்லம் பகுதியில் அதிமுக செயலாளர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வல்லம் பகுதியில் அதிமுக செயலாளராக இருப்பவர் அருள். இவர் மீது காரில் வந்த மர்மகும்பல் ஒன்று நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அருள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இந்த சம்பவத்துக்கு முன் விரோதம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அறிந்த அருளின் ஆதரவாளர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications