பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு.. மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழும் நிலை.. மக்கள் அதிர்ச்சி
Recommended Video

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. இதனிடையே கேஸ் சிலிண்டர்களின் விலையும் அதிகரித்துள்ளதால் மக்களுக்கு பேரிடியாக உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடந்த ஜூலை மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால் கடந்த 50 நாட்களாக இதன் விலை அதிகரித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஆகியவற்றால் இதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.81.75-ஆகவும், டீசல் விலை ரூ.74.41-ஆகவும் இருந்தது. இதைத் தொடந்து கடந்த மாதம் 5-ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.82.41 என்றும் டீசல் ரூ75.39 ஆகவும் இருந்தது.
[நிரவ் மோடியின் ரூ.637 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி]
பின்னர் செப்டம்பர் 10-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ. 83.91 மற்றும் ரூ.76.98 விற்கப்பட்டது. இப்படியே உயர்ந்து கொண்டிருந்த நிலையில் செப்டம்பர் 30-ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.80-க்கும், டீசல் விலை ரூ.79.08-க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இதன் விலை உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை ரூ.87.05-க்கும் டீசல் விலை ரூ.79.40-க்கும் விற்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை ரூ5.05-ம் டீசல் விலை ரூ.4.67-ம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் அதிகரித்துள்ளதால் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பட்ஜெட்டில் துண்டு விழும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications