நிரவ் மோடியின் ரூ.637 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி
டெல்லி: வங்கி மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு சொந்தமாக வெளிநாட்டிலும், இந்தியாவிலும் உள்ள ரூ.637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,400 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு இங்கிலாந்தில் பதுங்கி இருக்கிறார் வைர வியாபாரி, நிரவ் மோடி. அவரது குடும்பத்தினரும் வெளிநாடு தப்பிவிட்டனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் மும்பையில் உள்ள உள்ள அவரது வீடு உட்பட சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.

இதில், சி.பி.ஐ., அமலாக்க பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டிருந்தது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் உட்பட வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் உள்ள நிரவ் மோடியின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மொத்தம் ரூ.637 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளனர். வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.22.69 கோடி மதிப்புள்ள வைரங்கள் திரும்ப கொண்டுவரப்பட்டுள்ளன.
நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் வேறு எந்த நாட்டுக்கு செல்ல முற்பட்டாலும் கைது செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications