வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி: 13ம் தேதி வரை கார்டு மூலம் பெட்ரோல் போடலாம்!
சென்னை: டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்பது இல்லை என்ற முடிவை பெட்ரோல் பங்குகள் ஜனவரி 13ம் தேதி வரை தள்ளிப் போட்டுள்ளன.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பணத் தட்டுப்பாடாக உள்ளது. மக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு வந்துவிட்டனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஏற்கப் போவது இல்லை என்று பெட்ரோல் பங்குகள் அறிவித்தன. இதனால் வாகன ஓட்டிகளும், லாரி டிரைவர்களும் கவலை அடைந்தனர்.
இந்த சூழலில் கார்டுகளை ஏற்பது இல்லை என்ற முடிவை ஜனவரி 13ம் தேதி வரை தள்ளி வைத்துள்ளன பெட்ரோல் பங்குகள். இது குறித்து அனைத்து இந்தி பெட்ரோலியம் டீலர்கள் அசோசியேஷன் நிதி மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
ஹெச்.டி.எப்.சி. உள்ளிட்ட வங்கிகள் அனைத்து கிரெடிட் கார்டு பண பரிமாற்றத்திற்கும் ஜனவரி 9ம் தேதி முதல் 1 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், டெபிட் கார்டுகளுக்கு 0.25 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண விதிப்பை தள்ளிப் போடுவது குறித்து வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பெட்ரோலிய அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்க மாட்டோம் என்று பெட்ரோல் பங்குகள் அறிவித்ததை அடுத்த 1 சதவீத கட்டணம் வசூலிக்கும் முடிவை வங்கிகள் 13ம் தேதி வரை தள்ளிப் போட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications