வெள்ள நிவாரணப் பணிக்காக உழைத்த காசில் பொருட்கள் வாங்கி வழங்கிய மாற்றுத்திறனாளி
திருச்சி: சென்னை வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிக்காக தன்னுடைய உழைப்பால் சம்பாதித்த பணத்தினை அளித்துள்ளார் மாற்றுத்திறனாளி ஒருவர்.
சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இருந்தும் ஏற்கனவே லாரிகளில் ஏராளமான உணவு மற்றும் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளி வாலிபர் தனது நண்பர் உதவியுடன் ஒரு அட்டை பெட்டி பார்சலுடன் அங்கு வந்தார். அந்த அட்டை பெட்டியில் போர்வை, துண்டுகள் உள்பட துணி வகைகள், மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுக்களும் இருந்தன. சென்னையில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்புவதற்காக அவற்றை கலெக்டர் அலுவலகத்தில் அவர் ஒப்படைத்தார்.
சிறு வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் சூம்பிபோன சுரேஷ் கீரம்பூரில் வங்கி கடன் உதவி பெற்று கொல்லுப்பட்டறை நடத்தி வருகிறார். இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தின் மூலம் வாழ்ந்து வரும் சுரேஷ் தனது சொந்த செலவில் ரூபாய் 1000 மதிப்புள்ள நிவாரண பொருட்களை வாங்கி சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுப்புவதற்காக கொண்டு வந்ததாக கூறினார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தனது சொந்த செலவில் மனித நேயத்துடன் நிவாரண பொருட்கள் அனுப்பிய சுரேசை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் வியந்து பாராட்டினர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications