மாற்றுத் திறனாளி பெண்ணை வன்புணர்வு செய்த காமுகர்கள் கைது! - வீடியோ
வையம்பட்டியில் மாற்றுத்திறனாளி பெண்ணை வன்புணர்வு செய்த குற்றவாளிகளாஇ மணப்பாறை போலீசார் உடனே கைது செய்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி வையம்பட்டியில் மாற்றுத்திறனாளி பெண்ணை இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களை மணப்பாறை மகளிர் காவல்துறை போலீசார் 36 மணிநேரத்துக்குள் கைது செய்துள்ளனர்.

வையம்பட்டியில் மாற்றுத்திறனாளி பெண்ணை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அதையடுத்து, அவரது குடும்பத்தார் மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்டு, வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வாசுகி தலைமையிலான குழு தேடி வந்தது. இந்நிலையில் புகார் கொடுக்கப்படட் 36 மணிநேரத்துக்குள் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவரையும் இன்ஸ்பெக்டர் வாசுகி கைது செய்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications