சென்னையில் வெள்ளம் ஏற்படவும், அழிவிற்கும் தமிழக அரசே காரணம்: பொது நல வழக்கு
சென்னை: நள்ளிரவில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கையில் செம்பரபாக்கம் ஏரியில் இருந்து 39 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்ட தமிழக அரசு தான் சென்னையில் வெள்ளம் ஏற்படக் காரணம் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வர்த்தகரும், சமூக ஆர்வலருமான ராஜீவ் ராய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

சென்னையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் கமிஷன் ஒன்று அமைத்து விசாரிக்க வேண்டும். எந்த முன் அறிவிப்பும் இன்றி உபரி நீர் இந்தளவிற்கு திறந்து விட்டதால்தான் இந்த அளவிற்கு வெள்ளம் ஏற்படுவதற்கும், அழிவிற்கும் காரணம். தொடர்ந்து அணைக்கு எந்தளவிற்கு நீர் வருகிறது எந்தளவிற்கு வெளியேற்றப்படுகிறது என்று ஒருவர் கவனித்து வந்து இருக்க வேண்டும். தாமதமாக செம்பரம்பாக்கம் அணையில் இருந்து நீர் திறந்ததால்தான் இந்த நீர் அடையாற்றில் வெள்ளத்தை ஏற்படுத்தியது.
இந்த அணையில் இருந்து 39,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி நடு இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டு இருக்கும்போது நீரை திறந்தது பலருக்கும் தெரியவில்லை. தூங்கிக் கொண்டு இருந்தனர். நடு இரவில் விடப்பட்ட எச்சரிக்கையால் எந்த பலனும் இல்லை.
பொதுப் பணித்துறை அதிகாரிகள் நவம்பர் 29ஆம் தேதி செம்பரம்பாக்கம் அணையில் இருந்து நீர் திறந்துவிடுவதற்கு அனுமதி கோரி உள்ளனர். ஆனால், அவர் அதற்கு 3 நாட்கள் அனுமதி வழங்கவில்லை. டிசம்பர் 1 ஆம் தேதி நடு இரவில்தான் அனுமதி வழங்கியுள்ளார்.
நிலைமையை நன்றாக தெரிந்து இருந்தும் தலைமைச் செயலாளர் செயல்படாமல் இருந்துள்ளார். இவர்களது அஜாக்கிரதை தான் 280 பேர் இறக்கவும் பலரது சொத்துக்கள் சேதமடையவும் காரணமாக இருந்துள்ளது. ஒரு கமிஷன் அமைத்து தவறு செய்த அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். இது மனிதக் கொலை என்றுதான் கூற வேண்டும்.
இந்தக் கமிஷனில் அரசு அதிகாரிகள் தொழில்நுட்பக் கலைஞர்கள், மூத்த வக்கீல்கள், அறிவியல் அறிஞர்கள், சுற்றுப்புற ஆர்வலர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வுகள் முடித்து எடுக்கக் வேண்டிய நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை வெள்ளத்துக்கு 280 பேர் பலியாகி பள்ளிகள் மூடப்பட்டு, சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதே போன்று தமிழக அரசுக்கு எதிராக காங்கிரஸ் வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் என்பவரும் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications