ஓ.பி.எஸ், சசிகலா.. ஒரே நேரத்தில் பலத்தை நிரூபிக்க உத்தரவிடலாம் - ரோத்தகி
முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பும், சசிகலாவும் ஒரே சமயத்தில் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடலாம் என்றும் முகுல் ரோத்தகி பரிந்துரைத்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபையில் ஒரே சமயத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும், சசிகலாவையும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடலாம் என்றும் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி பரிந்துரைத்துள்ளார்.
ஒரு வாரத்தில் தமிழக சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடலாம் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவுக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி பரிந்துரைத்துள்ளார். அதன்படி, ஒரு வாரத்தில் சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடலாம். யார் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கிறார்களோ அவர்களே ஆட்சியமைக்கலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

இந்த ஆலோசனை ஒரு பரிந்துரைதான். இதை கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. உச்சநீதிமன்றத்தின் பொம்மை வழக்கு தீர்ப்பையொட்டி இந்த பரிந்துரையை முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். இதைத்தான் கடைசியில் ஆளுநர் கடைப்பிடித்தாக வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது. இதுதான் சட்ட ரீதியான நடைமுறையும் கூட.
மேலும் தனது பரிந்துரையில் இரு தரப்பையும் ஒன்றாக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடலாம் என்றும் அட்டர்னி ஜெனரல் பரிந்துரைத்துள்ளார். கடந்த 90களில் உத்தரப் பிரதேசத்தில் கல்யாண் சிங்கும், ஜெகதாம்பிகா பாலும் இதேபேல கூட்டாக சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடப்பட்டனர் என்ற உதாரணத்தையும் ரோத்தகி சுட்டிக் காட்டியுள்ளார்.
-
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications