”இரங்கல் கூட்டம் வேண்டாம்; லட்சிய எழுச்சிக் கூட்டம் நடத்துங்கள்”- பொன்ராஜ் கோரிக்கை
சென்னை: மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடத்தாதீர்கள் என்று அவருடைய உதவியாளரும், அறிவியல் ஆராய்ச்சியாளருமான வெ. பொன்ராஜ் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்துவதற்கு பதிலாக, அப்துல் கலாமின் லட்சிய கனவு விதைப்பு கூட்டமாக அதனை நடத்துங்கள். அதுதான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்த கூட்டத்தில் உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று அவர்களுக்கு டாக்டர் கலாமின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான 10 கட்டளைகளை உறுதிமொழியாக எடுக்க வையுங்கள்.
எல்லா துறையை சேர்ந்தவர்களுக்கும் 10 கட்டளைகளை அப்துல்கலாம் கொடுத்திருக்கிறார். அந்த 10 கட்டளைகள் Www.abdulkalam.com என்கின்ற இணையப் பக்கத்தில் இருக்கிறது. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.