சுற்றுச்சூழல் பாதுகாப்பு.. மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜன. 1 முதல் தடை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு மதுரை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தொடங்கி வெள்ளி வீதி வரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மதுரை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்தத் தடை ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை, ஆவணி, மாரட் மற்றும் மாசி ஆகிய 4 வீதிகளில் அடுத்த ஆண்டின் தொடக்க நாளான ஜனவரி 1ம் தேதியில் இருந்து தடை விதித்து மதுரை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளில் பிளாஸ்டிக் பொருட்களின் கழிவு தேங்கிக் கிடங்கின்றன. குறிப்பாக மீனாட்சி அம்மன் கோயில் செல்லும் சாலைகள் அனைத்திலும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. மேலும், இந்தப் பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகளில் பாலிதீன் பைகள் அதிகம் சேர்ந்து அடைப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு சுகாதார கேடு கோயிலின் அருகிலேயே உருவாகிறது. இதனால் இப்பகுதிகளில் பாலிதீன், பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தொடங்கி வெள்ளி வீதிகள் வரையுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அது முழுமையாக கடைபிடிக்கப்படாத நிலையில் மதுரை மாநகராட்சி மீண்டும் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கான தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கோயிலுக்கு வருவோர் மற்றும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வை மதுரை மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications