ஈரோட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: அதிகாரிகளை முற்றுகையிட்ட வியாபாரிகள்.. பரபரப்பு!
பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
ஈரோடு: ஈரோட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மஜித்வீதியில் செயல்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்பது அரசின் உத்தரவு. ஆனால் கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை ஆய்வு செய்யாமல் பறிமுதல் செய்வதாக வியாபாரிகள் குற்றம் சாட்டினர்.
மேலும் கடைகளில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் எடை அளவை தெரிவிக்க மறுக்கும் அதிகாரிகள் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அபராதம் விதிக்கும் முடிவை கைவிட்ட அதிகாரிகள் 40 மைக்ரோனுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் பறிமுதல் செய்தனர்.
அப்போது மாநகராட்சியின் வாகனத்தை வியாபாரிகள் சிறைபிடித்ததை தொடர்ந்து சம்பவ பகுதிக்கு வந்த நகர காவல்துறையினர் வாகனத்தை மீட்டனர். அபராதம் விதிப்பது குறித்து முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications