நல்லவேளை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இப்போ இல்லை.. நித்தியானந்தாவின் இந்த பார்முலாவை பாருங்க!
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சூத்திரம் ஒன்றை தவறு என்று சாமியார் நித்தியானந்தா கூறிய வீடியோ வைரலாகி உள்ளது.
Recommended Video

சென்னை: ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சூத்திரம் ஒன்றை தவறு என்று சாமியார் நித்தியானந்தா கூறிய வீடியோ வைரலாகி உள்ளது.
தற்போது இந்தியாவில் இருக்கும் சாமியார்கள் இளைஞர்களை கவர நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். பைக் ஓட்டுவது, டான்ஸ் ஆடுவது, கிரிக்கெட் விளையாடுவது என்று நிறைய விஷயம் செய்கிறார்கள்.
அறிவியல் குறித்து பேசுவதும் இதில் முக்கியமான ஒன்று. இந்த நிலையில் பிரபல சாமியார் நித்தியானந்தா ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சூத்திரம் ஒன்றை பற்றி வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளார்.

பார்முலா
உலகின் மிக முக்கியமான சூத்திரங்களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் e=mc^2 விதியும் ஒன்று. உலகின் பல கண்டுபிடிப்புகள் இதை மையமாக வைத்துதான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பொருளொன்றின் நிறை அதன் ஆற்றலுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் காட்டும் சமன்பாடு ஆகும் இது.
|
சைன்டிஸ்ட் நித்யானந்தா
இந்த நிலையில் இந்த சமன்பாடு தவறு என்று நிரூபித்து இருக்கிறார் (அட நம்புங்க பாஸ்) நித்யானந்தா. ஆம், இதற்கு அவர் ஒரு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதன்படி ஆற்றலும், நிறையும் எப்போதும் ஒன்றாக முடியாது, ஒன்றை மற்றொன்று சார்ந்து இருக்காது என்று விளக்கி உள்ளார். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

விளக்கம் அளித்துள்ளார்
அதோடு நிற்காமல் இந்த ஆற்றலையும், நிறையையும் அசைவம் சாப்பிடும் மோசமான மூளை கொண்ட நபரால் ஒன்றாக கொண்டிருக்க முடியாது. ஆனால் சைவம் சாப்பிடும் நபரின் மூளை இது இரண்டையும் ஒன்றாக கொண்டு இருக்கும் என்று விளக்கம் அளித்து, கடைசியில் எதையோ சொல்லி, என்னமோ பேசி, எப்படியோ வீடியோவை முடித்து குழப்பி இருக்கிறார்.

பெரிய சர்ச்சை
இந்த வீடியோ பெரிய சர்ச்சை ஆகியுள்ளது. இவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று பலரும் கேட்டு இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் விதிக்கும் ஆத்தூரில் பிரியாணி சாப்பிடும் நபருக்கும் என்ன சம்பந்தம் பாஸ் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். நேற்று பேஸ்புக், டிவிட்டர் முழுக்க இந்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications