பிளஸ் 2 முடிவுகள்: தமிழில் கடந்த முறை 3; இந்த முறை 5 பேர் முதலிடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தமிழ் மொழிப் பாடத்தில் 5 மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.
மாணவர்கள் ஒருவர் கூட தமிழில் முதலிடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் தமிழ் பாடத்தில் மூன்று பேர் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்திருந்தனர். அதில் அஸ்வத் என்ற மாணவரும் அடக்கம். எனினும், கடந்த ஆண்டு 198 மதிப்பெண்களே அவர்கள் பெற்றிருந்தனர்.
இந்த ஆண்டு தமிழில் முதலிடம் பெற்ற 5 மாணவிகள்:
நிவேதா - கோவை ஸ்ரீ சவுடேஸ்வரி மெட்ரிக் பள்ளி
ஆர்த்தி - நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி
சுகன்யா - கிருஷ்ணகிரி ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி
லாவண்யா - காஞ்சிபுரம் சயான் மெட்ரிக் பள்ளி
அனுப்பிரியா- கிருஷ்ணகிரி அவர்லேடி மேல்நிலைப்பள்ளி (அனைவரும் 199 மதிப்பெண்கள்)












Click it and Unblock the Notifications