பிளஸ் 2: கணிதத்தில் 3,361 பேர் சென்டம், இயற்பியலில் 5 பேர் மட்டுமே
சென்னை: பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தில் வெறும் 5 பேர் மட்டுமே 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியானது.
இம்முறை 2 பேர் மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

முதலிடம்
ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த மாணவி ஆர்த்தி, மாணவன் ஜஸ்வந்த் ஆகியோர் 1,200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

200க்கு 200
கணிதப் பாடத்தில் 3 ஆயிரத்து 361 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் தாவரவியலில் 20 பேரும், வேதியியலில் 1, 703 பேரும், விலங்கியலில் 10 பேரும், வணிக கணிதத்தில் 1072 பேரும், வணிகவியலில் 3 ஆயிரத்து 84 பேரும், இயற்பியலில் 5 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

5 பேர் தானா?
இயற்பியலில் வெறும் 5 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் வாங்கியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. இதே போன்று விலங்கியலிலும் 10 பேர் மட்டுமே 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாணவிகள்
வழக்கம் போன்று இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 87.9 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகளில் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications