தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் இன்று துவங்கியது
சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து மதிப்பெண் சான்றிதழ்கள் மே 21ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று காலை முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள்
சான்றிதழ்களை பெற்று பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யலாம். வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ரேஷன் கார்டு, பத்தாம் வகுப்பில் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்த அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருந்தால் அதை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக சான்றிதழ்கள் கடந்த சனிக்கிழமையே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.