அதிபர் ஆட்சி முறையை செயல்படுத்துகிறார் மோடி: அருண்சோரி காட்டம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அதிபர் ஆட்சி முறையை செயல்படுத்துகிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அருண்சோரி கடுமையாக தாக்கியுள்ளார்.
வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் அருண்சோரி. ஆனால் அண்மைக்காலமாக பாஜகவின் செயல்பாடுகளில் இருந்து விலகி கடுமையாக தாக்கி வருகிறார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று அருண்சோரி அளித்த பேட்டியில் கூறியதாவது:
மோதல் போக்கு
மக்கள் அளித்த மிகப்பெரிய வாய்ப்பை மோடி வீணாக்கிக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமராக இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்.
எத்தனை சர்ச்சைகள்
தாய்மதம் திரும்புதல், காதல்-ஜிஹாத், மாட்டிறைச்சிக்கு தடை, விருதுகள் திருப்பி அளிக்கப்பட்ட விவகாரம், தேசவிரோதக் குற்றச்சாட்டு, பாரதமாதாவுக்கு ஜே கோஷம், மாணவர்கள் போராட்டம் போன்ற பிரச்னைகள் மத்திய அரசால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை.
ஜனாதிபதி ஆட்சி தவறு
பிரித்தாளும் சூழ்ச்சியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. உத்தரகாண்ட், அருணாசலப் பிரதேசம் ஆகிய காங்கிரஸ் ஆட்சி நடந்த மாநிலங்களில் நிலைமையை மோசமாக்கி ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்தது தவறு. இதனை பாஜக திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளது.
பொறுப்பில்லாத அரசு
வெளியுறவுக் கொள்கையில் முக்கியமான அம்சமான பாகிஸ்தானுடனான உறவை மோடிக்கு கையாளத் தெரியவில்லை. பாகிஸ்தான் தரப்பு இந்தியாவை முட்டாளாக நோக்கும் வகையில் மோடியின் செயல்பாடுகள் உள்ளன. சீனாவுடனான உறவிலும் அவரிடம் தெளிவான பார்வையில்லை.
அதிபர் ஆட்சியை போல
வரி விதிப்பு விவகாரம், பொருளாதாரக் கொள்கை, வங்கிகளின் பிரச்னை போன்றவற்றில் அரசு பொறுப்பற்ற வகையில் செயல்பட்டு வருகிறது. மோடி தான் ஒருவரை மட்டுமே முன்னிறுத்தி தனிநபர் அரசை நடத்துகிறார். இது இந்தியாவுக்கு நல்லதல்ல. மோடியின் செயல்பாடுகள் சுயநலமிக்கவையாக உள்ளன. அதிபர் ஆட்சி முறையை அவர் செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அருண்சோரி கூறியுள்ளார்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
சவால்களுக்கு தயாராக வேண்டும்.. நீண்ட காலத்திற்கு தாக்கம் இருக்கும்.. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications