இளைஞர்களின் எண்ணங்களை கவர்ந்தவர் கலாம்- மோடி புகழாரம்
சென்னை: இந்தியர்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களை கவர்ந்தவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அழைக்கப்படும் அவுல் பக்கீர் ஜெயினுலாவுதீன் அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். மக்களின் குடியரசு தலைவரின் பிறந்தநாள் தமிழக அரசு சார்பில் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
அப்துல்கலாமின் 85வது பிறந்த நாளையொட்டி , பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tributes to our former President, the person who captured the imagination of every Indian, Dr. APJ Abdul Kalam on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) October 15, 2016
நரேந்தர மோடி தனது டுவிட்டர் பதிவில் :" இந்தியர்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களை கவர்ந்தவர் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் என்று அப்துல் கலாமிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதேபோல பல்வேறு தலைவர்களும் மோடிக்கு டுவிட்டரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அப்துல் கலாமின் பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.
Tributes 2 Shri #APJAbdulKalam "Missile Man"on his #birthanniversary."An Inspiration to Billion Youths" @drtamilisaibjp @PonnaarrBJP pic.twitter.com/eCtKjn3ZNf
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 15, 2016