உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி: அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியைத் தழுவினர். அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட பென்னாகரம் தொகுதியில் அவருக்கு இரண்டாவது இடமே கிடைத்தது. அதேபோல் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி போட்டியிட்ட மேட்டூர் தொகுதியிலும், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு ஜெயங்கொண்டம் தொகுதியிலும் தோல்வியை தழுவினர்.

PMK to contest alone in Local Body elections

இந்நிலையில், பசுமைத் தாயகம் அமைப்பின் தினத்தை முன்னிட்டு, சென்னை அய்யப்பந்தாங்கலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் முடிவில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. வழக்கறிஞர்கள் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். அப்துல்கலாம் நினைவிடம் அமைக்க போதிய இடத்தை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+