இன்று முதல் பாமகவும் விருப்ப மனு வழங்குகிறது.. ராமதாஸ் அறிவிப்பு
தைலாபுரம்: வரும் சட்டமன்றத் தேர்தலில் பா ம க சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு தரலாம் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்ட சபைகளுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி விட்டது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விரைந்து வெளியிடுவதற்கு வசதியாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் இன்று முதல் பிப்ரவரி 5-ந் தேதி வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். மனுவுடன் விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
மனுக்கள் பெறப்பட்ட பின்னர் அவற்றை ஆய்வு செய்து, இரு மாநிலங்களிலும் போட்டியிட விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications