ராஜபக்சே தோத்துட்டாரு.. லட்டு எடு கொண்டாடு.. தொண்டர்களுடன் கொண்டாடிய அன்புமணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பா.ம.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சைதாப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு ஏ.கே.மூர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர்கள் கன்னியப்பன், வி.ஜே. பாண்டியன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

PMK distributes laddu to cadres to celebrate Rajapaksa's defeat

இதேபோல் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞர் தலைவருமான அன்புமணி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ராஜபக்சே தோல்வியை பல்வேறு கட்சியினர் பட்டாசு வெடித்து தமிழகத்தில் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். விழுப்புரம், உளுந்தூர்ப்பேட்டையில் ஏராளமானோர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் திருக்கோவிலூரிலும் தேமுதிக, திமுக, விசி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+